/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராமநத்தம் காவலர்களுக்கு விபத்து காப்பீடு அட்டை வழங்கல்
/
ராமநத்தம் காவலர்களுக்கு விபத்து காப்பீடு அட்டை வழங்கல்
ராமநத்தம் காவலர்களுக்கு விபத்து காப்பீடு அட்டை வழங்கல்
ராமநத்தம் காவலர்களுக்கு விபத்து காப்பீடு அட்டை வழங்கல்
ADDED : செப் 16, 2025 11:56 PM

ராமநத்தம்; ராமநத்தம் காவலர்களுக்கு விபத்து காப்பீடு அட்டை மற்றும் டார்ச் சலைட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சென்னை - திருச்சி, கடலுார் - திருச்சி, விருத்தாசலம் - ஆத்துார் தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் இடத்தில் ராமநத்தம் அமைந்துள்ளது.
மாவட்டத்தின் கடைகோடியிலும், தேசிய நெடுஞ்சாலையிலும் அமைந்துள்ளதால், அதிக விபத்துகள் மற்றும் குற்றச் செயல்கள் நடக்கின்றன.
இதனால், காவலர்களின் பாதுகாப்பு கருதி, இந்திய தபால் துறையில் 5 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு அட்டை மற்றும் இரவு ரோந்து பணிக்காக டார்ச் லைட் ஆகியவற்றை ராமநத்தம் இன்ஸ்பெக்டர் பிருந்தா வழங்கினார்.
சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.