/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உலர்களமான சாலைகளால் வேப்பூரில் விபத்து அபாயம்
/
உலர்களமான சாலைகளால் வேப்பூரில் விபத்து அபாயம்
ADDED : அக் 23, 2024 06:42 AM

வேப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள், மானாவாரி பயிர்களான எள், மக்காச்சோளம், பருத்தி, வரகு பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். வேப்பூர் அடுத்த கழுதுார் ஊராட்சியில் உலர்களம் வசதி இல்லாததால், அப்பகுதி விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த விளைபொருட்களை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலையில் உலர்த்துகின்றனர்.
இதன் வழியாக வாகனங்கள், பள்ளி பஸ்கள், மோட்டார் பைக்குகள் செல்லும் போது விளை பொருட்களின் மீது மோதியும், வழுக்கியும் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, சர்வீஸ் சாலையில் விளை பொருட்களை உலர்த்துவதை தடுத்து, அப்பகுதியில் உலர்களம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.