/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின்னல் தாக்கி அ.தி.மு.க., பிரமுகர் பலி
/
மின்னல் தாக்கி அ.தி.மு.க., பிரமுகர் பலி
ADDED : நவ 02, 2024 05:50 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே வயலுக்கு சென்ற அ.தி.மு.க., பிரமுகர் மின்னல் தாக்கி, உடல் கருகி இறந்தார்.
விருத்தாசலம் அடுத்த ஏ.வல்லியம் கிராமத்தை சேர்ந்தவர் கலியன் மகன் மாயகிருஷ்ணன்,55; அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதியான இவர், நேற்று காலை வயலுக்கு சென்றவர் நீண்டநேரமாகியும் வரவில்லை.
சந்தேகமடைந்த அவரது மனைவி சுமதி மற்றும் குடும்பத்தினர், வயலுக்கு சென்று பார்த்தபோது, அங்கு மாயகிருஷ்ணன் மின்னல் தாக்கி உடல் கருகி இறந்து கிடந்தார்.
தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சென்று, மாயகிருஷ்ணன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.