ADDED : டிச 30, 2024 05:53 AM

அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் பகுதியில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலம் இறுதியாண்டு மாணவிகள் கிராமத்தில் தங்கி, வேளாண் பயிற்சி பெறும் திட்ட துவக்க விழா நடந்தது.
பரங்கிப்பேட்டை பேரூராட்சி கவுன்சிலர் ஆனந்தன் தலைமை தாங்கி, வேளாண் பயிற்சி பெறும் திட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாணவி ஹேமபிரியா வரவேற்றார். விழாவில், விவசாய சங்க தலைவர் நடராஜன், வர்த்தக சங்க செய்தி தொடர்பாளர் ரமேஷ் மற்றும் விவசாயிகள், வேளாண் மாணவிகள் பங்கேற்றனர்.
மாணவி ஹேம பால ரூபினி நன்றி கூறினார்.
