ADDED : ஏப் 04, 2026 09:30 PM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த கீரப்பாளையத்தில் புவனகிரி அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழிதேவன் துண்டு பிரசுரங்கள் வழங்கி பொது மக்களிடம் ஓட்டு சேகரித்தார். கடைத்தெருவில் நடந்த நிகழ்ச்சிக்கு, கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார்.
ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் பாலமுருகன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கனக சிகாமணி, ஒன்றிய அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட மகளிரணி செயலாளர் சுகந்தி ஆசைத்தம்பி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் அண்ணா ராமலிங்கம், இளைஞரணி இணை செயலாளர் கமலக்கண்ணன், ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் பிரவின், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ஜ., மாவட்ட துணை அமைப்பாளர் நடனமூர்த்தி, சக்திவேல், அ.ம.மு.க., ஒன்றிய செயலாளர் நாகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேட்பாளர் அருண்மொழிதேவன் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
:
