ADDED : ஏப் 05, 2026 11:34 PM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம், பூங்குணம் முந்திரி தொழிலாளர்களிடம் அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் ஓட்டு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் மோகன் எல்.என்.புரம், பூங்குணம் பகுதியில் உள்ள முக்கிய கட்சி நிர்வாகிகளை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பின் அப்பகுதியில் முந்திரி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
இதில் மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர் கார்த்திக், ஸ்தபதி தர்மா, சிற்பி சுந்தர்ராஜன், தகவல் தொழில்நுட்ப அணி மணி, மாவட்ட துணை செயலாளர் சலாவூதீன், நகர இணை செயலர் சத்யாகலைமணி, பூங்குணம் பகுதியை சேர்ந்த அருள், ஒன்றிய பொறுப்பாளர் பிரகாஷ், ஒன்றிய இளைஞரணி மணிமாறன், கிளை செயலாளர் தேசிங்கு, மாவட்ட ஒட்டுநர் அணி துணை செயலர் காந்தி, மீனவர் பகுதி கிளை செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
