ADDED : ஏப் 13, 2026 03:49 AM

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி அ.தி.மு.க., வேட்பாளர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதி திருமாணிக்குழி பகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் புவனேந்திரன், இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தொடர்ந்து வடுகபாளையம், அரிசி பெரியாங்குப்பம், எம்.புதுார் உள்ளிட்ட பகுதிகளில் அவர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருடன் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி அன்பு, முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, முன்னாள் ஜெ., பேரவை செயலாளர் வீரமணி, பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் செல்வ சோழன், பா.ஜ., நிர்வாகி வெங்கடாசலம், அ.தி.மு.க., துணை செயலாளர் தெய்வ சிகாமணி, ரவி, கல்குணம் பழனிச்செல்வம், தாமோதரன், குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
