ADDED : மார் 30, 2025 04:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் வல்லம்படுகை ஊராட்சியில் திண்ணை பிரச்சாரம் நடந்தது.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், துணை செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தனர். கிழக்கு ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர் மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., வீடு வீடாக சென்று கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் சாதனை திட்டங்கள் குறித்த துண்டுபிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.
ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, நிர்வாகிகள் ராமலிங்கம், செங்குட்டுவன், பழனி, மகேஷ், சவுந்தர்ராஜன், ஆறுமுகசாமி, பழனி, மாலதி பங்கேற்றனர். சேதுமாதவன் நன்றி கூறினார்.