/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., எம்.எல்.ஏ., துண்டு பிரசுரம் வழங்கல்
/
அ.தி.மு.க., எம்.எல்.ஏ., துண்டு பிரசுரம் வழங்கல்
ADDED : பிப் 05, 2026 06:46 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை குறித்த துண்டு பிரசுரத்தை பாண்டியன் எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் வழங்கினார்.
மாவட்ட பாசறை செயலாளர் வசந்த் தலைமை தாங்கினார். பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி, நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட தொழில் நுட்ப செயலாளர் பிரபு, மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி முன்னிலை வகித்தனர்.
கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை குறித்த துண்டு பிரசுரத்தை பொதுமக்கள், வியாபாரிகளிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், குமராட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், நகர அவை தலைவர் மலை மோகன், கவுன்சிலர் ஜெயந்தி ஜெய்சங்கர், மாவட்ட ஜெ., பேரவை துணை செயலாளர் பாஸ்கர், ஒன்றிய மீனவரணி சிவக்குமார், நிர்வாகிகள், கலைவாணன், ரவி, சக்கரவர்த்தி, காமில், அஸ்லாம், பார்த்திபன், கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

