ADDED : அக் 12, 2025 05:19 AM

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில், கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் அ.தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கி திண்ணை பிரசாரம் நடந்தது.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட பாசறை செயலாளர் வசந்த், ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, மாவட்ட இணைச் செயலாளர் ரங்கம்மாள் முன்னிலை வகித்தனர். நகர ஜெ., பேரவை செயலாளர் சந்தர் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் பாண்டியன் எம்.எல்.ஏ., கடந்த அ.தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கி, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, பரங்கிப்பேட்டை ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் சுதாகர், நகர அவைத் தலைவர் மலை மோகன், நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர், கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், முன்னாள் ஊராட்சி தலைவர் மகேஷ், நிர்வாகிகள் பார்த்திபன், கார்த்திகேயன், ரவி, கலைவாணன் உட்பட பலர் பங்கேற்றனர்.