ADDED : டிச 24, 2024 07:51 AM

புவனகிரி; புவனகிரி அருகே ஆலம்பாடியில் இருந்து உடையூர்-மருதுார் இணைப்பு சாலை ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
புவனகிரி அருகே ஆலம்பாடியில் இருந்து உடையூர், மருதுார் இணைப்பு சாலை உள்ளது. புவனகிரி சுற்றுப்பகுதியினர், வயல்களுக்கு செல்பவர்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். மேலும் மருதுார், தலைக்குளம், உளுத்துார், அம்பாள்புரம், பிரசன்னராமாபுரம் வழியாக பின்னலுார் பகுதிக்கும் கொளக்குடி வழியாக வடலுார், உடையூர் பகுதிக்கும் சென்று வருகின்றனர்.
தற்போது இந்த சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளதால் மழையில் சாலையில் தண்ணீர் தேங்கியதால் முற்றிலும் சேதமாகி பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இரவு நேரத்தில் இந்த சாலையை கடந்து செல்ல பலரும் அச்சமடைகின்றனர். மேலும் சாலையின் இரு பக்கமும் வயல்கள் மற்றும் சாலையின் இடப்பக்கம் வாய்க்கால் இருப்பதால் சேதடைந்த சாலையில் பலரும் விபத்தில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சாலையை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.