ADDED : நவ 23, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பெ.பொன்னேரி டாஸ்மாக் கடை அருகே டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற, சோழன் நகர் அரவிந்தன், 28, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்த 11 மதுபாட்டில் மற்றும் 600 ரூபாயை பறிமுதல் செய்தனர்.