ADDED : அக் 01, 2025 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையத்தில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சி.என்.பாளையம் வீரன்கோவில் அருகே, சி.என்.பாளையம் மாதா கோவில் தெருவை சேர்ந்த ஆபேல் துணிபையில் 15 அரசு மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தார்.
நடுவீரப்பட்டு போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து ஆபேல்,25; கைது செய்தனர்.