ADDED : பிப் 20, 2026 05:05 AM
அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி: மது பாட்டில் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்
குள்ளஞ்சாவடி போலீஸ் எஸ்.ஐ., கனகராஜ் மற்றும் போலீசார் நேற்று மதியம், அரசக்குப்பம் அய்யனார் கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக வந்த பைக் ஒன்றை நிறுத்தி அவர்கள் சோதனை செய்த போது, டாஸ்மாக் மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனைக்கு எடுத்து சென்றது தெரிய வந்தது. மதுபாட்டில் விற்ற தெற்கு தங்களிக்குப்பம் பகுதியை சேர்ந்த தண்டபாணி, 41; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்த போலீசார் அவரிடமிருந்து, 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
