sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அகில இந்திய வாலிபால் போட்டி; பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு

/

அகில இந்திய வாலிபால் போட்டி; பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு

அகில இந்திய வாலிபால் போட்டி; பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு

அகில இந்திய வாலிபால் போட்டி; பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு


ADDED : டிச 19, 2024 06:47 AM

Google News

ADDED : டிச 19, 2024 06:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; அகில இந்திய வாலிபால் போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்று வெண்கலம் வென்ற பள்ளி மாணவிகளுக்கு பாராட்டுவிழா நடந்தது.

உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான, 14வயதுக்குட்பட்டோருக்கான வாலிபால் போட்டி, கடந்த 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடந்தது.

இதில் பங்கேற்ற தமிழக அணி மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றது.

கடலுாரைச் சேர்ந்த செயின்ட் ஆன்ஸ் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் கனிஷ்கா, ஹாசினி ஆகியோர், தமிழக அணி சார்பில் இப்போட்டியில் பங்கேற்று வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

வெற்றிபெற்ற மாணவிகள் நேற்றுமுன்தினம் சொந்தஊருக்கு திரும்பிய நிலையில், பள்ளி நிர்வாகம் மற்றும் மெட்ரோ நண்பர்கள் கைப்பந்து கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பள்ளி வளாகத்தில் நடந்த பாராட்டுவிழாவில் மாணவிகளை, பள்ளி தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us