sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரூ.15 கோடியில் அம்ரூத் பாரத் மேம்பாட்டு பணிகள் ஆய்வு! ஹைடெக்காக மாறி வரும் சிதம்பரம் ரயில் நிலையம்

/

ரூ.15 கோடியில் அம்ரூத் பாரத் மேம்பாட்டு பணிகள் ஆய்வு! ஹைடெக்காக மாறி வரும் சிதம்பரம் ரயில் நிலையம்

ரூ.15 கோடியில் அம்ரூத் பாரத் மேம்பாட்டு பணிகள் ஆய்வு! ஹைடெக்காக மாறி வரும் சிதம்பரம் ரயில் நிலையம்

ரூ.15 கோடியில் அம்ரூத் பாரத் மேம்பாட்டு பணிகள் ஆய்வு! ஹைடெக்காக மாறி வரும் சிதம்பரம் ரயில் நிலையம்


UPDATED : ஏப் 19, 2025 07:09 PM

ADDED : ஏப் 19, 2025 06:39 AM

Google News

UPDATED : ஏப் 19, 2025 07:09 PM ADDED : ஏப் 19, 2025 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்; அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ், சிதம்பரம் ரயில் நிலையம் மேம்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தைஎட்டியுள்ள நிலையில், கோட்ட மண்டல மேலாளர் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையம், அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ், ைஹடெக் ரயில் நிலையமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சிதம்பரம் ரயில் நிலைய பணிகள், ரூ.15 கோடி நிதி ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு, துவங்கப்பட்டது.

பராமரிப்பின்றியும், பெரிய அளவில், மேம்படுத்தப்படாமல் இருந்த சிதம்பரம் ரயில் நிலையம், அழகு பெறும் வகையிலும், பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையிலும், மாநகரங்களில் உள்ளதுபோல், ைஹடெக் மாடலாக்கும் வகையில், சிதம்பரம் ரயில் நிலைய பணிகள் துவங்கி நடந்து வந்தது. அதன் அடிப்படையில், ரயில் நிலைய நுழைவு வாயில் முகப்பு, (போர்ட் டிகோ) பிரம்மாண்டமாக மாற்றப்பட்டது.

மழை காலத்தில் வாகனம் மற்றும் ஆட்டோவில் வரும் பயணிகள் நேராக போர்ட்டிகோவிற்கு வந்து இறங்கி உள்ளே செல்லும் வகையில் அமைக்கப்பட்டது.

மேலும் மேற்கூரைகளே இல்லாத 3 நடைமேடைகளிலும், புதிய மேற்கூரை அமைக்கப்பட்டது. தரைகள் அனைத்தும் டைல்ஸ் பதிக்கப்பட்டு, புதிதாக மாற்றப்பட்டது.

ஒவ்வொரு நடைமேடையிலும், 4 இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மேம்படுத்தப்பட்ட பயணிகள் ஓய்வறை, கழிவறை, விசாலமாக இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம், புதிய ரயில்வே நழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ரயில்வே ஆட்டோ ஸ்டேண்டிற்காக, பஸ் நிலையங்களில் உள்ளதுபோல், ஆட்டோக்களுக்கு இட ஒதுக்கீட்டுடன் ஸ்டேண்ட், ரயில் நிலைய வெளியில், பிளேவர் பிளாக் கற்கள் கொண்டு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

மாற்று திறனாளிகள் உள்ளே செல்லும் வகையில், சாய்தள பாதை அமைக்கப்பட்டுள்ளது.

தொய்வாக நடந்து வந்த பணிகள், இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து வேகம் எடுத்தது. மேலும் பணிகள் குறித்து தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு பணிகளை மேற்கொண்டு முடுக்கி விட்டனர்.

அதனை தொடர்ந்து தற்போது 75 சதவீத பணிகள் முடிந்து, இறுதி கட்டத்தை எட்டி வருகிறது.

இந்நிலையில், தென் னக ரயில்வே துணை தலைமை பொறியாளர் கட்டிஷக்தி, ரயில்வே பணிகளை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

அதில் மேற்கூரையில் சில இடங்களில் சரியான முறையில் இல்லாததை சுட்டிக்காட்டி, பணிகளை முடுக்கி விட்டார்.

ரயில் நிலைய உள் சாலைகள் விரைந்து அமைக்கும் பணிகளை துவங்க உத்தரவிட்டார்.

திருச்சி மண்டல கூடுதல் ரயில்வே மேளாளர் செல்வம், இருப்பு பாதை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருண், சிதம்பரம் ரயில் நிலைய வர்த்தக கண்காணிப்பாளர் மாதவ்சிங் மீனா, ரயில் நிலைய மேலாளர் தினேஷ், திட்ட பணிகள் ஆய்வாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us