/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அமுது படையில் விழா பொருட்கள் பெரும் நிகழ்வு
/
அமுது படையில் விழா பொருட்கள் பெரும் நிகழ்வு
ADDED : ஜன 18, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளை உத்திராபதியார் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் அமுது படையில் விழா நடப்பது வழக்கம்.
அதையொட்டி காணும் பொங்கல் அன்று கிராமம் முழுவதும் கோவில் சார்பில், திருத்தொண்டர் பாடல்கள் பஜனை பாடி அரிசி, பணம் உள்ளிட்ட பொருட்கள் பெறுவது வழக்கம்.
காணும் பொங்கலான நேற்று பஜனை நிகழ்ச்சி நடந்தது.
கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பஜனையில் பொதுமக்கள் அரிசி, பணம் உள்ளிட்ட பொருட்கள் தந்தனர்.