ADDED : நவ 03, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் பஸ் நிலையத்தில் பூங்கா அருகே அடையாளம் தெரியாத, 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். தகவலின்பேரில் சிதம்பரம் நகர போலீசார், உடலை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த வாலிபர், எந்த ஊரை சேர்ந்தவர், யார் என தெரியவில்லை, வாலிபர் கட்டம் போட்ட கைலி அணிந்திருந்தார். மேலும் தீபாவளி அன்று மது குடித்துவிட்டு பஸ் நிலையம் உள்ள ஒரு பள்ளத்தில் விழுந்து இறந்ததாக தெரிகிறது.
இது குறித்து நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.