/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 18, 2024 08:27 PM
கடலுார்; கடலுாரில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்ரதது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வச்சலா, இந்திரா, அமுதா முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரங்கசாமி கோரிக்கை விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில பொருளாளர் பாலசுப்ரமணியன், நிர்வாகிகள் ரங்கநாதன், ராஜேந்திரன், தர்மலிங்கம் வாழ்த்துரை வழங்கினர்.
இதில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் 6,750 மற்றும் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்திராணி நன்றி கூறினார்.