/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2ம் தேதி ஆனித்திருமஞ்சனம்
/
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2ம் தேதி ஆனித்திருமஞ்சனம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2ம் தேதி ஆனித்திருமஞ்சனம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2ம் தேதி ஆனித்திருமஞ்சனம்
ADDED : ஜூன் 17, 2025 12:36 AM
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தரிசனம் வரும் 2ம் தேதி நடக்கிறது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனித்திருமஞ்சன தரிசனம் வரும் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 24ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் வீதியுலா, 25ம் தேதி தங்க சூரிய பிறை வாகனத்தில் வீதியுலா, 27ம் தேதி தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. 28ம் தேதி வெள்ளி யானை வாகனத்தில் வீதியுலா, 29ம் தேதி தங்க கைலாச வாகனத்தில் வீதியுலா, 30ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதியுலா நடக்கிறது.
முக்கிய நிகழ்வாக வரும் 1ம் தேதி தேர்த் திருவிழா நடக்கிறது. அன்றிரவு 8:00 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடக்கிறது. 2ம் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு 4:00 மணி முதல் 6:00 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிேஷகம், 10:00 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்தி வீதியுலா நடக்கிறது.
மதியம் 3:00 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனம், ஞானகாச சித்சபா பிரவேசம் நடக்கிறது. 4ம் தேதி தெப்பல் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவசுந்தர தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.