sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புத்தேரி கோவிலில் அன்னாபிஷேகம்

/

புத்தேரி கோவிலில் அன்னாபிஷேகம்

புத்தேரி கோவிலில் அன்னாபிஷேகம்

புத்தேரி கோவிலில் அன்னாபிஷேகம்


ADDED : நவ 15, 2024 11:23 PM

Google News

ADDED : நவ 15, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், சந்திர மவுலீஸ்வரருக்கு அன்னாபிேஷகம் வெகு விமர்சையாக நடந்தது.

இதையொட்டி, நேற்று காலை 8:00 மணியளவில் மூலவர் வரதராஜ பெருமாள் தாயார் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

மாலை 5:30 மணிக்கு சந்திர மவுலீஸ்வரருக்கு அன்னம் சாற்றி சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இரவு 8:30 மணியளவில் அன்னம் அலங்காரம் களையப்பட்டு அர்த்தசாம பூஜை நடந்தது. தொடர்ந்து, சமபந்தி போஜனம் நடந்தது.

பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us