sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  

/

அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  

அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  

அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  


ADDED : ஜூலை 19, 2025 01:41 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி:பண்ருட்டி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா, அ.தி.மு.க., மகளிரணி மாநில துணை செயலர். 2016 -- 2021 வரை பண்ருட்டி எம்.எல்.ஏ.,வாக இருந்தார். இவரது கணவர் பன்னீர்செல்வம், 2011 - -2016 வரை பண்ருட்டி நகராட்சி தலைவராக இருந்தார். இவர்கள் இருவரும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக, 2024ல், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடலுார் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., சத்தியராஜ் தலைமையில் 3 கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று, பண்ருட்டி காமராஜர் நகரில் உள்ள சத்யா, பன்னீர்செல்வம் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

சோதனையின்போது, முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா திடீரென மயக்கம் அடைந்ததால், கடலுாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us