ADDED : ஜன 05, 2025 07:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் அடுத்த பாதிரிக்குப்பம் ஊராட்சி தலைவருக்கு, இன்று கூத்தப்பாக்கம் பக்ஷி திருமண மண்டபத்தில் இன்று பாராட்டு விழா நடக்கிறது.
கடலுார் ஒன்றியம், பாதிரிக்குப்பம் ஊராட்சிதலைவராக இருப்பவர் சரவணன். இவரது பதவிக்காலம் ஜன., 5ம்தேதியுடன் முடிவடைவதால், அவருக்கு பாராட்டுவிழா இன்று மாலை 4:00 மணிக்கு கடலுார் கூத்தப்பாக்கம் பக்ஷி திருமண மண்டபத்தில் நடக்கிறது. விழாவில் வர்த்தக சங்க நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், ஓய்வுபெற்ற போலீசார் உட்பட பலர் பங்கேற்று பேசுகின்றனர்.

