ADDED : செப் 05, 2025 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடியில் செங்குந்த மகாஜன சங்கம் மற்றும் மாவட்ட சமுதாய தொண்டு மன்றம் சார்பில் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
சிவஅப்பர் தலைமை தாங்கினார். வைத்தியநாதன், குமார், சேகர் முன்னிலை வகித்தனர். செயலாளர் முருகன் வரவேற்றார். செங்குந்த மகாஜன சங்க மாவட்ட தலைவர் ராஜவேலு, பொதுச் செயலாளர் கோவிந்தசாமி, பொருளாளர் ராஜாமணி, மூர்த்தி, சமுதாய பொருளாதார தொண்டு மன்ற செயற்குழு உறுப்பினர் ராசு, குறிஞ்சிவேலன், செல்வராசு, பாலிடெக்னிக் முதல்வர் ராஜா பங்கேற்றனர். கடந்த கல்வியாண்டில் அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.