/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
/
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : நவ 03, 2024 04:54 AM
கடலுார்: இந்திய சிவில் சர்வீஸ் பணிக்கான போட்டி தேர்வுக்கு, இலவச பயிற்சியில் பங்கேற்க, கடலுார் மாவட்ட மீனவ சமுதாய இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள, சிவில் சர்வீஸ் பணி ( இந்திய குடிமை பணி) போட்டித் தேர்வில் கலந்து கொள்வதற்கான ஆயத்த பயிற்சியை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்துடன் இணைந்து ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. 20 மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து பிரத்யேக பயிற்சி அளிக்கிறது.
இதற்காக ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியுள்ளது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுகள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
பயிற்சி பெற விரும்புவோர். விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கடலுார் மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் உதவி இயக்குனர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், கடலுார் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 5ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.