/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
ADDED : ஜன 04, 2026 04:19 AM

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசனத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சன்னதியில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
அதைத்தொடர்ந்து, சிவகாம சுந்தரி மணிமுக்தாற்றங்கரைக்கு சென்று திருக்கல்யாணம் செய்யும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது.
அதன்பின், சிவகாமசுந்தரி, நடராஜர் சுவாமிகள் சிறப்பு அலங்காரித்தில் அருள்பாலித்தனர்.
தொடர்ந்து, கோவில் உட்பிகாரத்தை வலம் வந்த, சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிகள், ராஜகோபுரம் வழியாக வெளிய வந்தபோது, ஆருத்ரா தரிசனம் காட்டப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

