sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உயர்மட்டக்குழு அமைக்க வேண்டும் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

/

உயர்மட்டக்குழு அமைக்க வேண்டும் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

உயர்மட்டக்குழு அமைக்க வேண்டும் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

உயர்மட்டக்குழு அமைக்க வேண்டும் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்


ADDED : செப் 27, 2025 02:40 AM

Google News

ADDED : செப் 27, 2025 02:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம் : என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப் பகுதிகளில் அரசு உயர்மட்டக்குழு அமைக்க வேண்டும் என, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., கூறினார்.

என்.எல்.சி., நிறுவனம் இரண்டாம் சுரங்க விரிவாக்கப் பணிக்காக மந்தாரக்குப்பம் திருவள்ளுவர் நகர், ஐ.டி.ஐ., நகர், பெரியார் நகர் உள்ளிட்ட இடங்களை கடந்த வாரம் கையகப்படுத்த முயன்றது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., சம்பவ இடத்திற்கு சென்று மக்களை சந்தித்து நேற்று குறைகளை கேட்டறிந்தார்.

பின், அவர் கூறுகையில், 'இப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கெங்கைகொண்டான் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாற்று இடம் வழங்க வேண்டும்.

என்.எல்.சி., சுரங்க பணிகளால் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் ஆதாரம் அழிந்து வருகிறது. இரண்டாம் சுரங்கத்தில் இருந்து முதல் சுரங்கத்திற்கு நிலக்கரி ஏற்றி செல்லும் லாரிகளால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு, காற்று மாசு ஏற்படுகிறது.

இதுகுறித்து அரசு உடனடியாக உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் இப்பகுதி மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us