
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்; ஆருத்ரா தரிசனத்தையொட்டி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை 7:00 மணியளவில் மூலவர் பிரளயகாலலேஸ்வரர், அழகிய காதலி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந் தது. தொடர்ந்து, காலை 8:00 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள நடராஜர், சிவகாமசுந்தரி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், தேன், பன்னீர், இளநீர், திரவியப்பொடி ஆகியவைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. 9:00 மணியளவில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர், திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர், திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவில்களில் உள்ள நடராஜர் சுவாமிகளுக்கு ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை நடந்தது.

