ADDED : ஏப் 21, 2025 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்::
நெய்வேலியில் இருந்து சாம்பல் மண் கடத்திய டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார், குப்பநத்தம் புறவழிச்சாலையில் வாகன சோதனை செய்தபோது, அவ் வழியே வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்தனர். அதில், நெய்வேலியில் இருந்து சாம்பல் மண் கடத்தி வந்தது தெரிந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, நெய்வேலி தொப்புளிகுப்பம் லாரன்ஸ், 35; என்பவரை கைது செய்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

