ADDED : ஜூலை 02, 2025 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார் : டிரைவரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ், 31. கலவை போடும் இயந்திர வண்டியின் டிரைவர் . இவர் நேற்று முன்தினம் வடலுார் சந்தை அருகே அய்யன் ஏரி போகும் சாலையில் வாகனத்தை ஓட்டி சென்றார். அப்போது அவரை வழிமறித்த இரண்டு நபர்கள் அவரை ஆபாசமாக திட்டி, தாக்கினர். இதில் காயமடைந்த ஜெகதீஷ் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.