ADDED : மார் 11, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே விவசாயியை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த பாலக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை, 47. இவர் கடந்த 8 ம் தேதி தனது நிலத்தில் வேலி அமைத்தார்.
அப்போது, அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளர், அதேபகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, தனது நிலத்தில் வேலி அமைப்பதாக கூறி, ஏழுமலையிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். மேலும், ஏழுமலையை அசிங்கமாக திட்டி, தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில், ஆலடி போலீசார் கிருஷ்ணசாமி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

