sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஏலம் புறக்கணிப்பு: விவசாயிகள் பாதிப்பு

/

ஏலம் புறக்கணிப்பு: விவசாயிகள் பாதிப்பு

ஏலம் புறக்கணிப்பு: விவசாயிகள் பாதிப்பு

ஏலம் புறக்கணிப்பு: விவசாயிகள் பாதிப்பு


ADDED : ஜூலை 31, 2025 03:44 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: இ-நாம் திட்டத்தில் பணம் செலுத்தும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, விருத்தாசலம் கமிட்டியில் வியாபாரிகள் ஏலத்தை புறக்கணித்தனர்.

விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் கொள்முதல் செய்யப்படும் நெல் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களுக்கு உரிய தொகையை வியாபாரிகளிடம் இருந்து பெற்று, மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் சார்பில் விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், இ-நாம் திட்டத்தின் கீழ் (மின்னணு தேசிய வேளாண் சந்தை) பணப் பட்டுவாடாவில் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்கும் வகையில், விளைபொருட்களுக்கு உரிய தொகையை வியாபாரிகளே நேரடியாக ஆன்லைன் மூலம் விவசாயிகளுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டது.

இதனையேற்காத வியாபாரிகள், நேற்று ஏலத்தில் பங்கேற்காமல், கொள்முதல் பணியை புறக்கணித்தனர். நாளை (இன்று) ஏலம் நடைபெறுமா என தெரியாமல் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.






      Dinamalar
      Follow us