/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்னாள் ஆசிரியர் கொலையில் ஆட்டோ டிரைவர் கைது
/
முன்னாள் ஆசிரியர் கொலையில் ஆட்டோ டிரைவர் கைது
ADDED : டிச 06, 2024 06:50 AM

பாகூர் : முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
கடலுார், வண்டிப்பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் தினகரன், 38, சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றங்கரையில், கடந்த 25ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்ததில், தினகரனை திருபாதிரிப்புலியூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதீஷ் 30; அவரது நண்பர் அரவிந்த், 23; ஆகியோர் அடித்து கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து, அரவிந்தை போலீசார் கடந்த 3ம் தேதி கைது செய்து, சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த சதீஷை, பாகூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.