/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மரக்கிளை விழுந்து ஆட்டோ டிரைவர் பலி
/
மரக்கிளை விழுந்து ஆட்டோ டிரைவர் பலி
ADDED : டிச 20, 2024 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகர் ஆமைபள்ளம் பகுதியை சேர்ந்தவர் செல்வகணபதி மகன் அன்பழகன்(35), ஆட்டோ ஓட்டுனர் .
கடந்த 12ஆம் தேதி, கன மழையின்போது , அண்ணாமல நகரில் உள்ள போஸ்ட் ஆபீஸ் ஆட்டோ ஸ்டாண்டில், ஆட்டோவை நிறுத்திவிட்டு, அதில் அமர்ந்திருந்தார்.
அப்பொழுது மரக் கிளை ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோவில் உட்கார்ந்திருந்த அன்பழகனுக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. உடன் அவரை சிதம்பரம் மாவட்ட மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அன்பழகன் இறந்தார்.அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.