ADDED : டிச 22, 2025 04:42 AM
மந்தாரக்குப்பம்: கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சுகாதாரத்துறையினர் சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஊராட்சி பகுதிகளில் கடந்த சில தினங்களாக, பெய்த மழை மற்றும் கொசுக்கள் அதிகரிப்பால் பொதுமக்கள், சளி, காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளிட்டவைகளால் பாதிப்பு அடைகின்றனர்.
மேலும் சுகாதாரத்துறையினர் வீடு மற்றும் கடைகளுக்கு சென்று ஆய்வு செய்து, கொசு வளரும் இடங்களை கண்டறிந்து, காய்ச்சல் அதிகம் பரவும் இடங்களில் முகாம் அமைத்து கண்டறிதல் வேண்டும். மேலும் தேவையில்லாத பொருட்களை அகற்றவும், நீரில் கொசு புழுக்கள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காமல் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஊராட்சி பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

