/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : பிப் 03, 2026 03:22 AM

விருத்தாசலம்: கம்மாபுரம் கிராம விவசாயிகளுக்கு கிராமப்புற மதிப்பீடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நான்காம் ஆண்டு மாணவிகள், விருத்தாசலத்தில் தங்கி, வேளாண் அனுபவ பயிற்சி பெறுகின்றனர். அதன்படி, கம்மாபுரம் கிராமத்தில், வேளாண் மாணவிகள் சங்கவி, சரயு, சங்கவி, ஸ்ரீநிதி, சுபாஷினி, சுஜா, ஸ்வேதா, வாகீஸ்வரி, வினிதா, யமாவதி ஆகியோர் மழைநீர் சேகரிப்பு, பயிர்கள் சாகுபடி செய ல்விளக்கப் பயிற்சி அளித்தனர்.
பங்கேற்பு மதிப்பீடு தொடர்பாக கிராமத்தின் வளங்கள், சிக்கல்கள், தேவைகள் மற்றும் வளர்ச்சிகள் குறித்த படம் வரைந்து, செயல்விளக்கப் பயிற்சி அளித்தனர்.
கிராம வளர்ச்சியில் விவசாயிகளின் பங்கு குறித்து விளக்கினர். விவசாயிகள், கிராம மக்களின் சந்தேகங்களுக்கு மாணவிகள் விளக்கம் அளித்தனர்.

