
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : விருத்தாசலத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில்,வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக நிர்வாக மேலாளர் சீத்தாபதி தலைமை தாங்கினார். பி.டி.ஓ., ராதிகா பேரணியை துவக்கி வைத்தார்.
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருந்து துவங்கி, முக்கிய வீதிகளின் வழியாக பாலக்கரை வரை சென்றது. இந்த பேரணியில், பெண்கள் பலர் கலந்து கொண்டு,18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
வாக்களிப்பது எனது கடமை, வாக்களிப்பது எனது உரிமை, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, எனது வாக்கு சுதந்திரமானது என கூறி, பொதுமக்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை மகளிர் திட்ட மேலாளர் திருநாவுக்கரசு, மற்றும் மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

