/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குமளங்குளம் கோவிலில் பால்குட ஊர்வலம்
/
குமளங்குளம் கோவிலில் பால்குட ஊர்வலம்
ADDED : பிப் 25, 2024 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : குமளங்குளம் மகாமயான காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது.
நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளம் மகாமயான காளியம்மன் கோவிலில் 2ம் ஆண்டு திருவிழாவையொட்டி கடந்த 22ம் தேதி காப்பு கட்டுதல் நடந்தது.
நேற்று முன்தினம் கும ளங்குளம் குளக்கரையில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால் குடம் ஏந்தி ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின், சாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று அம்மனுக்கு தாலாட்டு நடந்தது.