/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பீர் பாட்டில் தாக்குதல்; 4 பேர் மீது வழக்குப் பதிவு
/
பீர் பாட்டில் தாக்குதல்; 4 பேர் மீது வழக்குப் பதிவு
பீர் பாட்டில் தாக்குதல்; 4 பேர் மீது வழக்குப் பதிவு
பீர் பாட்டில் தாக்குதல்; 4 பேர் மீது வழக்குப் பதிவு
ADDED : செப் 16, 2025 11:53 PM
வடலுார்; குடிபோதையில் பீர் பாட்டில் தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
வடலுார் அடுத்த சேராக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி, 38; இவர், அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடந்த விழாவில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, சுவாமியை மறைப்பதாக கூறி அவரிடம் சிலர் தகராறில் ஈடுபட்டனர்.
இதனை தட்டிக்கேட்ட விஜயலட்சுமியின் கணவர் சக்திவேலை, 45; ஒரு கும்பல் பீர் பாட்டிலால் தாக்கியது. மேலும், விஜயலட்சுமியின் புடவையை இழுத்து மனபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த செல்லதுரை, சின்னதுரை, செல்வகுமார் தனுஷ் ஆகிய 4 பேர் மீதும் வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.