/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவர்களுக்கு சைக்கிள்: எம்.எல்.ஏ., வழங்கல்
/
மாணவர்களுக்கு சைக்கிள்: எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : பிப் 03, 2024 07:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 130 மாணவர்களுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., விலையில்லா சைக்கிள் களை வழங்கினார்.
கடலுார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
பள்ளித் தலைமை ஆசிரியர் குணசேகர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக எம்.எல்.ஏ., அய்யப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு 130 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். விழாவில், மாநகராட்சி கவுன்சிலர் சுபாஷினி ராஜா, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

