ADDED : நவ 19, 2024 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர்: வேப்பூர் அருகே சாலையை கடக்க முயன்றவர் மீது பைக் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேற்கு வங்க மாநிலம், கல்மாவை சேர்ந்தவர் சுபல்ராணா, 54. கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த ஏ.சித்துார் ஆரூரான் சர்க்கரை ஆலையில் தங்கி பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில் ஆலையின் எதிரே சேலம் - கடலுார் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியே வந்த பஜாஜ் பல்சர் மோட்டார் பைக், சுபல்ராணா மீது மோதியது. இதில், சுபல்ராணா, 54, மோட்டார் பைக்கை ஓட்டி வந்த வேப்பூர் அடுத்த லட்சுமணபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன், 18; இருவரும் பலத்த காயமடைந்தனர்.
வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.