நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த பைக்கை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம், ஆலடி சாலையை சேர்ந்தவர் முருகன் மகன் பரத்குமார், 30. வெல்டர். கடந்த 7ம் தேதி இரவு தனது பல்சர் பைக்கை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு துாங்கச் சென்றார். மறுநாள் காலை பார்த்தபோது பைக்கை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.

