நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த தம்பிப்பேட்டை பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன், 30; இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் பைக்கில் கடலுார் சென்றார்.
ஆயிக்குப்பம் மெயின் ரோடு அருகே இவரது பைக்கின் பின்புறம் வேகமாக வந்த மற்றொரு பைக் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பிரபாகரன், அவரது மனைவி பவித்ரா, மகன் அதியன், மகள் அதிதி மற்றும், விபத்து ஏற்படுத்திய மற்றொரு பைக்கின் ஓட்டுனர் செந்தில்குமார், அவரது குடும்பத்தினர் சுஷ்மிகா, நிவேதா ஆகியோர் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

