sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பேரணி செல்ல அனுமதி மறுப்பு போலீசாரிடம் பா.ஜ., வாக்குவாதம்

/

பேரணி செல்ல அனுமதி மறுப்பு போலீசாரிடம் பா.ஜ., வாக்குவாதம்

பேரணி செல்ல அனுமதி மறுப்பு போலீசாரிடம் பா.ஜ., வாக்குவாதம்

பேரணி செல்ல அனுமதி மறுப்பு போலீசாரிடம் பா.ஜ., வாக்குவாதம்


ADDED : ஆக 16, 2025 03:26 AM

Google News

ADDED : ஆக 16, 2025 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: கடலுார் மாவட்டம், பெண்ணாடம், தொளார் கைகாட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து நந்தப்பாடி பஸ் நிறுத்தம் வரை சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியேந்தி, பைக்கில் பேரணி செல்ல பா.ஜ., வினர் பெண்ணாடம் போலீசில் கடந்த 2 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

இருப்பினும், நேற்று காலை 9:50 மணிக்கு தடையை மீறி பா.ஜ., நல்லுார் ஒன்றிய தலைவர் மணிமேகலை தலைமையில், முன்னாள் மண்டல தலைவர் காமராஜ் உட்பட 30க்கும் மேற்பட்டோர் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் தொளார் கைகாட்டி பஸ் நிறுத்தம் அருகே ஒன்று கூடினர்.

தகவலறிந்து வந்த பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையிலான போலீசார், தேசிய கொடியேந்தி நடந்து செல்வது என்றால் செல்லுங்கள், பைக்கில் செல்லக்கூடாது எனவும், மீறினால் கைது செய்வோம் என எச்சரித்தனர்.

இதனால், போலீசாருக்கும், பா.ஜ., வினருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

அதனைத் தொடர்ந்து, பேரணி செல்லாமல் பா.ஜ.,வினர் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us