ADDED : டிச 17, 2025 06:52 AM

கடலுார்: குறிஞ்சிப்பாடியில் பா.ஜ.,சார்பில், 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயண' பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
பா.ஜ., கடலுார் கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். குறிஞ்சிப்பாடி தொகுதி சட்டசபை தொகுதி இணை அமைப்பாளர் அறிவழகன், முன்னாள் மாவட்ட தலைவர் மணிகண்டன், முன்னாள் ஓ.பி.சி.,அணி அமைப்பாளர் சாய்சுரேஷ், குமரேசன் முன்னிலை வகித்தனர்.
பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜா, தேசிய மகளிர் அணித்தலைவர் வானதி, மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில செயலாளர் அஸ்வத்தாமன், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர். பா.ஜ., மாவட்ட பொதுச்செயலாளர்கள் கார்த்திகேயன், ராமமூர்த்தி தாமோதரன், பொருளாளர் சரவணன், குறிஞ்சிப்பாடி தொகுதி பொறுப்பாளர் ஜெனித் மேகநாதன், நெய்வேலி தொகுதி பொறுப்பாளர் செந்தாமரைக்கண்ணன், விவசாய அணி மாநில செயலாளர் வெங்கடாசலம், பண்ருட்டி தொகுதி அமைப்பாளர் வினோத்குமார், ஊடகப்பிரிவு ஸ்ரீதர், துணைத்தலைவர்கள் பத்மினி ஜெயந்தி, கார்த்திகேயன், செந்தில்குமார், சுதா, திருமுருகன் மற்றும் பா.ஜ., மாநில, மாவட்ட, மண்டல, நகர பொறுப்பாளர்கள், கட்சியினர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தி.மு.க., ஆட்சி நிலையைக்கண்டித்தும், திருப்பரங்குன்றத்தில் கோர்ட் உத்தரவை மதிக்காததை கண்டித்தும், கடலுார் நொச்சிக்காட்டில் சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலங்களை கையகப்படுத்தும் அரசாணையை திரும்பப்பெற வலியுறுத்தியும் பேசினர்.

