ADDED : ஏப் 11, 2026 11:18 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடத்தை விதி மீறியதாக பா.ஜ., நிர்வாகி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
விருத்தாசலம் பா.ஜ., இளைஞரணி தலைவர் சரவணன், 32; இவர், நேற்று காலை பா.ம.க., வேட்பாளரை வரவேற்று, உளுந்துார்பேட்டையில் சாலையில் பொது மக்களுக்கு இடையூறாக தேர்தல் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்தார். இதையடுத்து, சரவணன் மீது விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாரதநேரு தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
