ADDED : பிப் 02, 2025 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாநகர தலைவர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தார்.
மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கண்டன உரையாற்றினார்.
மலையடிக்குப்பத்தில் 162 ஏக்கர் அரசு தரிசு நிலத்தை கையகப்படுத்தும் அரசின் முடிவைக் கண்டிப்பது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை ஆர்ப்பாட்டத் தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.