sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொடர் மழை காரணமாக பிச்சாவரத்தில் படகு சவாரி நிறுத்தம்

/

தொடர் மழை காரணமாக பிச்சாவரத்தில் படகு சவாரி நிறுத்தம்

தொடர் மழை காரணமாக பிச்சாவரத்தில் படகு சவாரி நிறுத்தம்

தொடர் மழை காரணமாக பிச்சாவரத்தில் படகு சவாரி நிறுத்தம்


ADDED : அக் 19, 2024 11:52 PM

Google News

ADDED : அக் 19, 2024 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை : மழை காரணமாக பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில் இயற்கை சூழலுடன் மருத்துவ குணம் கொண்ட சுரபுண்ணை என்னும் மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்துள்ளதால், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து, படகு சவாரி செய்து இயற்கை அழகை கண்டுகளித்து செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று பிச்சாவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால், படகு சவாரி நிறுத்தப்பட்டது.

இருந்தும், மழையை பொருட்படுத்தாமல் வந்த வெளியூர் சுற்றுலா பயணிகள் படகு சவாரி இயக்கப்படவில்லை என தெரிந்துக்கொண்டு திரும்பி சென்றனர். பாதுகாப்பு கருதி மோட்டார் படகுகள் மற்றும் துடுப்பு படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us