UPDATED : ஜூன் 04, 2026 06:51 PM
ADDED : ஜூன் 04, 2026 05:51 PM

கடலுார்: கடலுார் தலைமை தபால்நிலையம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து நிபுணர்கள் மோப்பநாயுடன் சோதனை மேற்கொண்டனர்.
கடலுார் தலைமை தபால்நிலையம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகம் இரண்டு ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், மதியம் 1:45 மணியளவில் வெடிக்கும் என மண்டல அலுவலகத்திற்கு இமெயில் மிரட்டல் விடுக்கப்பட்டது. மண்டல அலுவலக அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று மதியம் ஒரு மணியளவில் கடலுார் தலைமை தபால்நிலையம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாயுடன் சென்று சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து மிரட்டல் வெறும் புரளி எனத்தெரிந்தது.
