ADDED : டிச 08, 2025 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
மாணவியின் பெற்றோர் புகாரில், விருத்தாசலம் மகளிர் போலீசார் விசாரித்தனர். அதில், சிறுமியை சீரழித்தது, 17 வயதுடைய பிளஸ் 2 மாணவர் என்பது தெரிந்தது.
போலீசார், 'போக்சோ' வழக்கில் சிறுவனை கைது செய்து, கடலுார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

